Tuesday, March 24, 2009

தோழிக்கு நன்றி

கடலொத்த கருத்து கற்பனை
குவிந்து இருக்க, காத்துகிடக்க
காதலில் மட்டும் களித்திருந்தேன்
கனவில் குடி இருந்தேன்

காதல் என்பது அற்புதம் தான்
ஆழ்கடல் அரிய முத்து தான்
சிப்பிக்குள் சிலிர்க்கும் முத்தாகினும்
கடலின் சிறு தேக்கம் அன்றோ?

உணர்த்திய தோழிக்கு நன்றி...

குறிக்கோள்

வெள்ளை முயல் ஒன்று
விளையாடும் வேளையிலே
வெறி கொண்ட ஓநாய் பார்த்துவிட
விரட்டி வந்தது பின்னாலே

பார்ப்பதற்கு சிறு முயல் எனினும்
பார்த்து முடிப்பதற்குள்
புதர் பள்ளம் புல் பாதைகளில்
பறப்பது போல கடந்து சென்றது

விரட்டி வந்த ஓநாயோ
வெள்ளை முயலை பிடிக்க முடியாமல்
அது மறைந்த திசையை
ஏமாற்றத்துடன் பார்த்து நின்றது

உயரத்தில் உட்கார்ந்து பார்த்த குரங்கு
உருவத்தில் பெரியவன் தான்
உறுமலும் பலே தான்
முயலை மட்டும் தான் பிடிக்க
முடியவில்லை போல
என கேலி பேசியது
திரும்பிய ஓநாய்
உண்மை உரைத்தது...

உயிர் காக்கும் குறிக்கோளுடன்
ஓடும் முயல் அது, வெறும்
ஒரு வேளை உணவுக்காக
ஓடும் நான்,
எப்படி வெல்ல முடியும் ?

Tuesday, March 17, 2009

முட்டாள் உதடுகள்

கவலை கொள்ள
கண்ணீர் சொரிய
காரணமாயிரம் கண்டுபிடிக்கின்றன
கண்கள் இரண்டும்


புன்னகைக்க
காரணம் ஒன்று கூட
கிடைக்கவில்லையா
உதடுகளே உங்களுக்கு ?

Friday, March 13, 2009

முதல் மழை

அன்றொரு நாள்... நல்ல மழை...
கடலலையில் கால் நனைத்து
ஈரம் காயும் முன்
கொட்டும் மழையில் நனைந்து
குளிரில் நடுங்கி...
சிரித்து... சிவந்தோம்...


அன்றொரு நாள்... நல்ல மழை...
மழை நிற்கும் வரை பேசலாம்
என்று முடிவெடுத்து...
மனம் முழுக்க மழை நின்றுவிடகூடாதே
என்ற பரிதவிப்பினால்
மௌனமாய் மேகத்திடம் வேண்டி நின்றோம்...


அன்றொரு நாள்... நல்ல மழை...
மழைக்கு ஓரமாய் ஒதுங்கி
துளிகளை ரசித்து...
கதைகள் பேசி...
பழைய வருத்தங்களை புதுப்பித்து
புதிய சண்டைகளை துவக்கினோம்...


அன்றொரு நாள்... நல்ல மழை...
தனியே விடுதியில் தங்கி
தவித்து கொண்டிருந்தவளை
தேற்ற நடுநிசியில்
கொட்டும் மழையில்
குடை எடுக்காமல் வந்தாய் நீ...


அன்றொரு நாள்... நல்ல மழை...
அலுவலக பணி முடிக்க
நள்ளிரவாக, நடுவே தூக்கம் விரட்ட
மழைக்கு இதமாக... காபி குடித்தபடியே
முதன் முதல் மறுநாளை
மழைத்துளிகளின் நடுவே ஒன்றாக வரவேற்றோம்...


இன்றும்... முதல் மழை...


It rained that day…
Wet, we were with waves and sea
Even before we could be dry
With rain, we became more wet
Adding to our smiles and shy…

It rained that day…
After deciding to talk until it rains
We spent the time in silence
For, we were both busy praying
That the rain never stopped…

It rained that day…
I was alone away from home
In the dark night and thru the darker rain
You came to console me…
Forgetting your umbrella…

It rained that day…
Taking the lonely shelter
We started talking about our rains…
Old arguments we renewed
Fight we started a new…

It rained that day…
Assignments at office to be completed
Awake we were until midnight
Welcomed the morrow we both
With hot coffee and our warm love between us…

It rained today…

Monday, March 2, 2009

எதிர்பார்ப்பின்
எதிரொலி...
ஏமாற்றம்!!