Tuesday, March 24, 2009

குறிக்கோள்

வெள்ளை முயல் ஒன்று
விளையாடும் வேளையிலே
வெறி கொண்ட ஓநாய் பார்த்துவிட
விரட்டி வந்தது பின்னாலே

பார்ப்பதற்கு சிறு முயல் எனினும்
பார்த்து முடிப்பதற்குள்
புதர் பள்ளம் புல் பாதைகளில்
பறப்பது போல கடந்து சென்றது

விரட்டி வந்த ஓநாயோ
வெள்ளை முயலை பிடிக்க முடியாமல்
அது மறைந்த திசையை
ஏமாற்றத்துடன் பார்த்து நின்றது

உயரத்தில் உட்கார்ந்து பார்த்த குரங்கு
உருவத்தில் பெரியவன் தான்
உறுமலும் பலே தான்
முயலை மட்டும் தான் பிடிக்க
முடியவில்லை போல
என கேலி பேசியது
திரும்பிய ஓநாய்
உண்மை உரைத்தது...

உயிர் காக்கும் குறிக்கோளுடன்
ஓடும் முயல் அது, வெறும்
ஒரு வேளை உணவுக்காக
ஓடும் நான்,
எப்படி வெல்ல முடியும் ?

No comments: