Wednesday, April 27, 2011

மகனே...

அந்நாளில்...
வயிற்றில் இருக்கும் போது உதைத்தாய்
வலிக்கவில்லை, பூரித்தேன்...

பின்னாளில்...
விளையாட்டில் பிஞ்சு பாதங்களால் உதைத்தாய்
வலிக்கவில்லை, சேர்ந்து சிரித்தேன்...

இந்நாளில்...
வயதாகி விட்டதால் வேண்டாமென உதைக்கிறாய்
ஏனோ தெரியவில்லை... வலிக்கின்றது.

Tuesday, April 26, 2011

ஆனையும் குதிரையுமாகி
சவாரிக்கு காத்து இருக்கின்றன
மாமனின் முதுகும்
தாத்தனின் தோள்களும்...
பால்குடி மடியை விட்டு
இறங்கத்தான் ,
இன்னும் மனமில்லை
எங்கள் ராஜகுமாரானுக்கு

மூன்று மாதங்கள் :-)

Wednesday, April 20, 2011

பணக்கார பிச்சை

ஆயிரங்களை அள்ளி குவிக்கும்
அவசரத்தில் அப்பா அம்மா
அலுவலகம் சென்றபின்னர்...
ஆயாவிடம் பிச்சை எடுக்கிறது பிள்ளை
அன்பிற்காக...