Tuesday, April 23, 2013

கவனிப்பார் யாருமில்லை


விலை அதிகம் 
வீண் செலவு, வேண்டாம்
வீட்டை அடைக்கும் என
பெற்றோர் மறுத்ததும்...
விசும்பலுடன் நகர்ந்து செல்லும்
குழந்தைகளை கண்டு 
"கோ" என கேவி அழுதன
 கடையிலுருந்த பொம்மைகள்...
கவனிப்பவர் தான் எவருமில்லை