Tuesday, June 2, 2009



பளபளக்கும் தங்க சங்கிலி
புத்தம் புது வடிவில்
பணம் பத்தாயிரம் கொடுத்து வாங்கி
பெருமையுடன் அணிந்து
படியிறங்கி ஒய்யாரமாய் நடக்கையிலே,
பக்கத்து வீட்டு ஏழை பிள்ளை
பால் இல்லாமல் அழ கேட்டு
புது சங்கிலி அழுத்தியது
ஏனோ...
தங்கம் கனம் ஏறியது

No comments: