இன்று என்ன தென்றலில்
தேன் கலந்தது போல
இப்படி ஒரு குளுமை, இனிமை ?
கண்டிப்பாக கலந்திருக்க வேண்டும்...
உன் மூச்சு காற்று.
Sunday, October 24, 2010
Thursday, October 7, 2010
புதிய உறவு
கர்ப்பத்தில் புது உயிரை
காத்து வளர்க்கும்
மனைவியை
கவனிக்கும் பொருட்டு
தாயாகவும் புது உறவு கொள்கிறான்...
கணவன்.
காத்து வளர்க்கும்
மனைவியை
கவனிக்கும் பொருட்டு
தாயாகவும் புது உறவு கொள்கிறான்...
கணவன்.
Sunday, July 18, 2010
காதலும் கடவுளும் ஒன்று
கடவுள் தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பாராம்
காதல்?
சமைக்கும் அவசரத்தில்
குழம்பு காரமானாலும்
உப்பு குறைந்து போனாலும்
மிச்சம் வைக்காமல்
என்னை வையாமல் நீ
சாப்பிட்டு முடிக்கும் தட்டில்...
நான் வீடு வர நேரமாகியதால்...
எனக்கு பசிக்கும்...
எனக்கு பிடிக்கும் என்று....
சமைக்க தெரியாமலும்
நீ சமைத்த
கருகிய அந்த கத்திரிக்காய் பொறியலில்...
குளிர் தாங்க மாட்டேன்...
இரவில் பல முறை
நீ எழுந்து ,
என்னை எழுப்பாமல்
மெல்ல சரி செய்யும்
கலைந்த என் போர்வை மடிப்புகளில்...
உனக்கு புரியாத என் மொழி
நகைச்சுவை திரைப்பட
காட்சிகளை தொலைக்காட்சியில்
நான் பார்த்து சிரிக்க
என் சிரிப்பில் பூக்கும்
உன் புன்னகையில்....
உன்னை விட்டு
சிறிது நேரம்
நான் விலகினாலும்
என்னை விலக்காமல்
என்னையே சுற்றி சுற்றி விளையாடும்
உன் நினைவுகளில்...
அங்கிங்கெனாத படி
எங்கும் இப்படி
உன் காதல் நீக்கமற
நிறைந்து இருப்பதினாலேயே
காதலும் கடவுளும் ஒன்று... உன்
காதலும், கடவுளும் ஒன்று.
துரும்பிலும் இருப்பாராம்
காதல்?
சமைக்கும் அவசரத்தில்
குழம்பு காரமானாலும்
உப்பு குறைந்து போனாலும்
மிச்சம் வைக்காமல்
என்னை வையாமல் நீ
சாப்பிட்டு முடிக்கும் தட்டில்...
நான் வீடு வர நேரமாகியதால்...
எனக்கு பசிக்கும்...
எனக்கு பிடிக்கும் என்று....
சமைக்க தெரியாமலும்
நீ சமைத்த
கருகிய அந்த கத்திரிக்காய் பொறியலில்...
குளிர் தாங்க மாட்டேன்...
இரவில் பல முறை
நீ எழுந்து ,
என்னை எழுப்பாமல்
மெல்ல சரி செய்யும்
கலைந்த என் போர்வை மடிப்புகளில்...
உனக்கு புரியாத என் மொழி
நகைச்சுவை திரைப்பட
காட்சிகளை தொலைக்காட்சியில்
நான் பார்த்து சிரிக்க
என் சிரிப்பில் பூக்கும்
உன் புன்னகையில்....
உன்னை விட்டு
சிறிது நேரம்
நான் விலகினாலும்
என்னை விலக்காமல்
என்னையே சுற்றி சுற்றி விளையாடும்
உன் நினைவுகளில்...
அங்கிங்கெனாத படி
எங்கும் இப்படி
உன் காதல் நீக்கமற
நிறைந்து இருப்பதினாலேயே
காதலும் கடவுளும் ஒன்று... உன்
காதலும், கடவுளும் ஒன்று.
Tuesday, April 13, 2010
சொக்கும் வாசம்
அலுவலக பேருந்து
இறக்கி விட்டதும்
வீடு நோக்கி தினமும்
சிறு நடை பயணம்...
கால்கள் வீட்டை
அடைய அவசர எட்டு வைக்க
நாசிகளுக்கோ விருந்து
நடக்கும் வழியெங்கும்...
பூக்கடையில் காத்திருக்கும்
மலர்ந்த மல்லிகை தான்
முதன் முதலில்
என்னை வரவேற்கும்
பக்கத்திலேயே பிள்ளையார்
கோவில்...
பூ பன்னீர்
பிரசாதக் கலவை வாசம்...
தெருவோரம் இருக்கும்
பக்கோடா கடையில்
மாலை பலகாரம் தயாராகிறது...
கொதிக்கும் எண்ணெய்
அதில் பொறியும்
வெங்காய பக்கோடா
வாசமே போதும்
வேறு விளம்பரம் தேவை இல்லை...
அதையும் கடந்து
அப்பாடா.... வீடு வந்து
பூட்டிய கதவை திறந்து
உள்ளே நுழைத்ததும்...
இன்னும் மிச்சமிருக்கும் உன் வாசம்...
சொக்கி தான் போகிறேன்...
தினமும்...
சொக்கி தான் போகிறேன்...
இறக்கி விட்டதும்
வீடு நோக்கி தினமும்
சிறு நடை பயணம்...
கால்கள் வீட்டை
அடைய அவசர எட்டு வைக்க
நாசிகளுக்கோ விருந்து
நடக்கும் வழியெங்கும்...
பூக்கடையில் காத்திருக்கும்
மலர்ந்த மல்லிகை தான்
முதன் முதலில்
என்னை வரவேற்கும்
பக்கத்திலேயே பிள்ளையார்
கோவில்...
பூ பன்னீர்
பிரசாதக் கலவை வாசம்...
தெருவோரம் இருக்கும்
பக்கோடா கடையில்
மாலை பலகாரம் தயாராகிறது...
கொதிக்கும் எண்ணெய்
அதில் பொறியும்
வெங்காய பக்கோடா
வாசமே போதும்
வேறு விளம்பரம் தேவை இல்லை...
அதையும் கடந்து
அப்பாடா.... வீடு வந்து
பூட்டிய கதவை திறந்து
உள்ளே நுழைத்ததும்...
இன்னும் மிச்சமிருக்கும் உன் வாசம்...
சொக்கி தான் போகிறேன்...
தினமும்...
சொக்கி தான் போகிறேன்...
Thursday, March 25, 2010
சின்ன சின்ன உணர்வுகள்
சில முகங்களில் கோவம்
பல முகங்களில் கண்ணீர்
சில முகங்களில் ஏக்கம்
சில, ஏமாற்றம்
இருந்தும்...
அனைத்தும் அழகு
அள்ளி கொள்ளும் அழகு
ஆரம்ப பள்ளி வாசலில்
பெற்றோரை பிரியும் குழந்தைகள்
பல முகங்களில் கண்ணீர்
சில முகங்களில் ஏக்கம்
சில, ஏமாற்றம்
இருந்தும்...
அனைத்தும் அழகு
அள்ளி கொள்ளும் அழகு
ஆரம்ப பள்ளி வாசலில்
பெற்றோரை பிரியும் குழந்தைகள்
Tuesday, October 6, 2009
பரிணாமம்
நண்பனாக நான்கு வருடங்கள்
நன்கு பழகிய முகம் தான்...
நாயகனான பின் நேர்காண
ஏனோ எனக்கு நாணம்...
பார்வைகள் பரிமாறவே
பலமுறை தயங்கி நான் பரிதவிக்க...
படபடவென்று பேசி சிரித்த
பழைய நாட்களுக்கோ பரிகாசம்
நண்பன் காதலனாய் உருமாறியிருக்க
நெஞ்சுக்குள் என் உணர்வு தடுமாறியிருக்க...
எழுந்தது இந்த குழப்பத்தின் குரல்
எனக்குள் கேள்வி பின் எனக்குள் பதில்...
நிமிர்ந்து பார்த்த நல்நட்பும்
நிலத்தில் கோலமிடும் நம்காதலும்
பெயர் வேறு பெற்றிருந்தாலும்...
நிச்சியமாக... பாசத்தின் பரிமாணங்களே...
நிச்சியமாக... பாசத்தின் பரிணாமங்களே...
நன்கு பழகிய முகம் தான்...
நாயகனான பின் நேர்காண
ஏனோ எனக்கு நாணம்...
பார்வைகள் பரிமாறவே
பலமுறை தயங்கி நான் பரிதவிக்க...
படபடவென்று பேசி சிரித்த
பழைய நாட்களுக்கோ பரிகாசம்
நண்பன் காதலனாய் உருமாறியிருக்க
நெஞ்சுக்குள் என் உணர்வு தடுமாறியிருக்க...
எழுந்தது இந்த குழப்பத்தின் குரல்
எனக்குள் கேள்வி பின் எனக்குள் பதில்...
நிமிர்ந்து பார்த்த நல்நட்பும்
நிலத்தில் கோலமிடும் நம்காதலும்
பெயர் வேறு பெற்றிருந்தாலும்...
நிச்சியமாக... பாசத்தின் பரிமாணங்களே...
நிச்சியமாக... பாசத்தின் பரிணாமங்களே...
Monday, September 21, 2009
தேடுகிறேன்...
மத்தாப்பு வெளிச்சத்திலும்
தெரிய மறுக்கின்றது
சிவகாசி குழந்தைகளின்
சின்ன சிரிப்பு ஒன்று...
தெரிய மறுக்கின்றது
சிவகாசி குழந்தைகளின்
சின்ன சிரிப்பு ஒன்று...
Subscribe to:
Posts (Atom)