இன்னும் இரு கண்கள் வேண்டும்
இருக்கும் கண்கள் இமைக்கும் போதும்
உன்னை காண...
இன்னும் இரு கண்கள் வேண்டும் எனக்கு
Monday, March 28, 2011
Monday, December 6, 2010
We are one :-)
We were two
This date, We became one
Soon we would be three
Still, we would be one
Later we may become fifty or a hundred
But we would be one.
We are one today.
This date, We became one
Soon we would be three
Still, we would be one
Later we may become fifty or a hundred
But we would be one.
We are one today.
Sunday, October 24, 2010
இனிக்கும் தென்றல்
இன்று என்ன தென்றலில்
தேன் கலந்தது போல
இப்படி ஒரு குளுமை, இனிமை ?
கண்டிப்பாக கலந்திருக்க வேண்டும்...
உன் மூச்சு காற்று.
தேன் கலந்தது போல
இப்படி ஒரு குளுமை, இனிமை ?
கண்டிப்பாக கலந்திருக்க வேண்டும்...
உன் மூச்சு காற்று.
Thursday, October 7, 2010
புதிய உறவு
கர்ப்பத்தில் புது உயிரை
காத்து வளர்க்கும்
மனைவியை
கவனிக்கும் பொருட்டு
தாயாகவும் புது உறவு கொள்கிறான்...
கணவன்.
காத்து வளர்க்கும்
மனைவியை
கவனிக்கும் பொருட்டு
தாயாகவும் புது உறவு கொள்கிறான்...
கணவன்.
Sunday, July 18, 2010
காதலும் கடவுளும் ஒன்று
கடவுள் தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பாராம்
காதல்?
சமைக்கும் அவசரத்தில்
குழம்பு காரமானாலும்
உப்பு குறைந்து போனாலும்
மிச்சம் வைக்காமல்
என்னை வையாமல் நீ
சாப்பிட்டு முடிக்கும் தட்டில்...
நான் வீடு வர நேரமாகியதால்...
எனக்கு பசிக்கும்...
எனக்கு பிடிக்கும் என்று....
சமைக்க தெரியாமலும்
நீ சமைத்த
கருகிய அந்த கத்திரிக்காய் பொறியலில்...
குளிர் தாங்க மாட்டேன்...
இரவில் பல முறை
நீ எழுந்து ,
என்னை எழுப்பாமல்
மெல்ல சரி செய்யும்
கலைந்த என் போர்வை மடிப்புகளில்...
உனக்கு புரியாத என் மொழி
நகைச்சுவை திரைப்பட
காட்சிகளை தொலைக்காட்சியில்
நான் பார்த்து சிரிக்க
என் சிரிப்பில் பூக்கும்
உன் புன்னகையில்....
உன்னை விட்டு
சிறிது நேரம்
நான் விலகினாலும்
என்னை விலக்காமல்
என்னையே சுற்றி சுற்றி விளையாடும்
உன் நினைவுகளில்...
அங்கிங்கெனாத படி
எங்கும் இப்படி
உன் காதல் நீக்கமற
நிறைந்து இருப்பதினாலேயே
காதலும் கடவுளும் ஒன்று... உன்
காதலும், கடவுளும் ஒன்று.
துரும்பிலும் இருப்பாராம்
காதல்?
சமைக்கும் அவசரத்தில்
குழம்பு காரமானாலும்
உப்பு குறைந்து போனாலும்
மிச்சம் வைக்காமல்
என்னை வையாமல் நீ
சாப்பிட்டு முடிக்கும் தட்டில்...
நான் வீடு வர நேரமாகியதால்...
எனக்கு பசிக்கும்...
எனக்கு பிடிக்கும் என்று....
சமைக்க தெரியாமலும்
நீ சமைத்த
கருகிய அந்த கத்திரிக்காய் பொறியலில்...
குளிர் தாங்க மாட்டேன்...
இரவில் பல முறை
நீ எழுந்து ,
என்னை எழுப்பாமல்
மெல்ல சரி செய்யும்
கலைந்த என் போர்வை மடிப்புகளில்...
உனக்கு புரியாத என் மொழி
நகைச்சுவை திரைப்பட
காட்சிகளை தொலைக்காட்சியில்
நான் பார்த்து சிரிக்க
என் சிரிப்பில் பூக்கும்
உன் புன்னகையில்....
உன்னை விட்டு
சிறிது நேரம்
நான் விலகினாலும்
என்னை விலக்காமல்
என்னையே சுற்றி சுற்றி விளையாடும்
உன் நினைவுகளில்...
அங்கிங்கெனாத படி
எங்கும் இப்படி
உன் காதல் நீக்கமற
நிறைந்து இருப்பதினாலேயே
காதலும் கடவுளும் ஒன்று... உன்
காதலும், கடவுளும் ஒன்று.
Tuesday, April 13, 2010
சொக்கும் வாசம்
அலுவலக பேருந்து
இறக்கி விட்டதும்
வீடு நோக்கி தினமும்
சிறு நடை பயணம்...
கால்கள் வீட்டை
அடைய அவசர எட்டு வைக்க
நாசிகளுக்கோ விருந்து
நடக்கும் வழியெங்கும்...
பூக்கடையில் காத்திருக்கும்
மலர்ந்த மல்லிகை தான்
முதன் முதலில்
என்னை வரவேற்கும்
பக்கத்திலேயே பிள்ளையார்
கோவில்...
பூ பன்னீர்
பிரசாதக் கலவை வாசம்...
தெருவோரம் இருக்கும்
பக்கோடா கடையில்
மாலை பலகாரம் தயாராகிறது...
கொதிக்கும் எண்ணெய்
அதில் பொறியும்
வெங்காய பக்கோடா
வாசமே போதும்
வேறு விளம்பரம் தேவை இல்லை...
அதையும் கடந்து
அப்பாடா.... வீடு வந்து
பூட்டிய கதவை திறந்து
உள்ளே நுழைத்ததும்...
இன்னும் மிச்சமிருக்கும் உன் வாசம்...
சொக்கி தான் போகிறேன்...
தினமும்...
சொக்கி தான் போகிறேன்...
இறக்கி விட்டதும்
வீடு நோக்கி தினமும்
சிறு நடை பயணம்...
கால்கள் வீட்டை
அடைய அவசர எட்டு வைக்க
நாசிகளுக்கோ விருந்து
நடக்கும் வழியெங்கும்...
பூக்கடையில் காத்திருக்கும்
மலர்ந்த மல்லிகை தான்
முதன் முதலில்
என்னை வரவேற்கும்
பக்கத்திலேயே பிள்ளையார்
கோவில்...
பூ பன்னீர்
பிரசாதக் கலவை வாசம்...
தெருவோரம் இருக்கும்
பக்கோடா கடையில்
மாலை பலகாரம் தயாராகிறது...
கொதிக்கும் எண்ணெய்
அதில் பொறியும்
வெங்காய பக்கோடா
வாசமே போதும்
வேறு விளம்பரம் தேவை இல்லை...
அதையும் கடந்து
அப்பாடா.... வீடு வந்து
பூட்டிய கதவை திறந்து
உள்ளே நுழைத்ததும்...
இன்னும் மிச்சமிருக்கும் உன் வாசம்...
சொக்கி தான் போகிறேன்...
தினமும்...
சொக்கி தான் போகிறேன்...
Subscribe to:
Posts (Atom)