Wednesday, April 27, 2011

மகனே...

அந்நாளில்...
வயிற்றில் இருக்கும் போது உதைத்தாய்
வலிக்கவில்லை, பூரித்தேன்...

பின்னாளில்...
விளையாட்டில் பிஞ்சு பாதங்களால் உதைத்தாய்
வலிக்கவில்லை, சேர்ந்து சிரித்தேன்...

இந்நாளில்...
வயதாகி விட்டதால் வேண்டாமென உதைக்கிறாய்
ஏனோ தெரியவில்லை... வலிக்கின்றது.

No comments: