Tuesday, June 30, 2009

பாவம்

வாகனத்து புகையும்
வளர்ந்த நகரமும்
வண்ணத்து பூச்சிகளை
விழுங்கி விட்டதை அறியாமல்...
வழியில் சில பூக்கள்
இன்னும்
காத்திருக்கின்றன
பாவம்...

Friday, June 19, 2009

தாயுமானவள்

உடல் சோர்ந்து, மடி மீது
தலை வைத்து நீ உறங்கிய
அந்த நிமிடங்களில்...
இருபத்தியொன்பது வயதான உன் முகத்தில்
ஒரு குழந்தையின் சாயல்...
உணர்ந்தேன்...
உனக்கு தாரம் மட்டுமல்ல நான்...
தாயுமானவள்.

Friday, June 5, 2009

ஏன்?

காதலை விளையாட்டாக்கி
கை விட்டு ஒருத்தி போக
காயத்தை பத்திரப்படுத்தி
கட்டியவளை கஷ்டபடுத்தினான்

காதல் பூப்பது ஒரே முறை எனின்
கடமைக்கு கல்யாணம் பண்ணுவதேன்?
கல்யாண முடிவு, உறுதி இல்லாமல்
கடனுக்கு காதல் மட்டும் கொள்வது தான் ஏன்?

Tuesday, June 2, 2009



பளபளக்கும் தங்க சங்கிலி
புத்தம் புது வடிவில்
பணம் பத்தாயிரம் கொடுத்து வாங்கி
பெருமையுடன் அணிந்து
படியிறங்கி ஒய்யாரமாய் நடக்கையிலே,
பக்கத்து வீட்டு ஏழை பிள்ளை
பால் இல்லாமல் அழ கேட்டு
புது சங்கிலி அழுத்தியது
ஏனோ...
தங்கம் கனம் ஏறியது

Thursday, May 21, 2009


உனக்காக
வழிந்த கண்ணீர்
வாய்க்கால் வழி ஓடியிருந்தால்
விளைச்சலாவது பெருகியிருக்கும்

Sunday, May 17, 2009

The Pain of Love...

The Pain of Love is the best punishment for the worst enemy
Death, may be... to lesser foes

Monday, May 4, 2009

சங்கமம்

கடலிலே கலந்த பின்
கங்கை என்ன காவேரி என்ன?
காதலிலே விழுந்த பின்
இந்து என்ன இசுலாமியன் என்ன?