நண்பனாக நான்கு வருடங்கள்
நன்கு பழகிய முகம் தான்...
நாயகனான பின் நேர்காண
ஏனோ எனக்கு நாணம்...
பார்வைகள் பரிமாறவே
பலமுறை தயங்கி நான் பரிதவிக்க...
படபடவென்று பேசி சிரித்த
பழைய நாட்களுக்கோ பரிகாசம்
நண்பன் காதலனாய் உருமாறியிருக்க
நெஞ்சுக்குள் என் உணர்வு தடுமாறியிருக்க...
எழுந்தது இந்த குழப்பத்தின் குரல்
எனக்குள் கேள்வி பின் எனக்குள் பதில்...
நிமிர்ந்து பார்த்த நல்நட்பும்
நிலத்தில் கோலமிடும் நம்காதலும்
பெயர் வேறு பெற்றிருந்தாலும்...
நிச்சியமாக... பாசத்தின் பரிமாணங்களே...
நிச்சியமாக... பாசத்தின் பரிணாமங்களே...
Tuesday, October 6, 2009
Monday, September 21, 2009
தேடுகிறேன்...
மத்தாப்பு வெளிச்சத்திலும்
தெரிய மறுக்கின்றது
சிவகாசி குழந்தைகளின்
சின்ன சிரிப்பு ஒன்று...
தெரிய மறுக்கின்றது
சிவகாசி குழந்தைகளின்
சின்ன சிரிப்பு ஒன்று...
Tuesday, June 30, 2009
பாவம்
வாகனத்து புகையும்
வளர்ந்த நகரமும்
வண்ணத்து பூச்சிகளை
விழுங்கி விட்டதை அறியாமல்...
வழியில் சில பூக்கள்
இன்னும்
காத்திருக்கின்றன
பாவம்...
வளர்ந்த நகரமும்
வண்ணத்து பூச்சிகளை
விழுங்கி விட்டதை அறியாமல்...
வழியில் சில பூக்கள்
இன்னும்
காத்திருக்கின்றன
பாவம்...
Friday, June 19, 2009
தாயுமானவள்
உடல் சோர்ந்து, மடி மீது
தலை வைத்து நீ உறங்கிய
அந்த நிமிடங்களில்...
இருபத்தியொன்பது வயதான உன் முகத்தில்
ஒரு குழந்தையின் சாயல்...
உணர்ந்தேன்...
உனக்கு தாரம் மட்டுமல்ல நான்...
தாயுமானவள்.
தலை வைத்து நீ உறங்கிய
அந்த நிமிடங்களில்...
இருபத்தியொன்பது வயதான உன் முகத்தில்
ஒரு குழந்தையின் சாயல்...
உணர்ந்தேன்...
உனக்கு தாரம் மட்டுமல்ல நான்...
தாயுமானவள்.
Friday, June 5, 2009
ஏன்?
காதலை விளையாட்டாக்கி
கை விட்டு ஒருத்தி போக
காயத்தை பத்திரப்படுத்தி
கட்டியவளை கஷ்டபடுத்தினான்
காதல் பூப்பது ஒரே முறை எனின்
கடமைக்கு கல்யாணம் பண்ணுவதேன்?
கல்யாண முடிவு, உறுதி இல்லாமல்
கடனுக்கு காதல் மட்டும் கொள்வது தான் ஏன்?
கை விட்டு ஒருத்தி போக
காயத்தை பத்திரப்படுத்தி
கட்டியவளை கஷ்டபடுத்தினான்
காதல் பூப்பது ஒரே முறை எனின்
கடமைக்கு கல்யாணம் பண்ணுவதேன்?
கல்யாண முடிவு, உறுதி இல்லாமல்
கடனுக்கு காதல் மட்டும் கொள்வது தான் ஏன்?
Tuesday, June 2, 2009
Subscribe to:
Posts (Atom)
