Monday, June 16, 2008

ஒரு அறை வீடு ஆனது

காலை கடந்தும் சுருட்டாத பாய் - அதன்
காலடியில், கலைந்த
கோலத்தில், நேற்றிரவு
குளிர் காத்த கம்பிளி

மூன்று வாரமாய்
துடைப்பம் மறந்த தரை
முந்தா நாள் சாப்பிட்ட
மிச்சதுடன் எச்சில் தட்டு

துவைத்த வெள்ளை சட்டையும்
களைந்த கருப்பு சட்டையும்
ஒன்றாய் ஒற்றுமையாய்
கொடி ஓரத்தில் கசங்கியபடி...

பிரம்மச்சாரி அறையின்
அடையாளங்கள்...
அறையுடன் அனைத்தும்
காணமல் போனது

என் கை தாலிக்குரியவள்
எனக்குரியவள் ஆனபின்
என் மெட்டிக்குரியவள்
வீடு வந்தபின்...

No comments: