Wednesday, July 23, 2008

என்னால் மட்டும் இயன்றால்


உன் பூ இதழ்களில்
புன்னகையாய் பிறந்து
ஒளிர்ந்திட மாட்டேனா...
நீ கண்மூடி உறங்கையிலே
உன் கனவாய் வந்து
தாலாட்டிட மாட்டேனா...
சுவாச காற்றாக மாறி
உள்ளே சென்று உன் உயிர்
தொட்டிட மாட்டேனா...
விட்டு தூரம் போனாலும்
உன் உடன் வரும் நினைவுகளிலாவது
நான் வாழ்ந்திட மாட்டேனா...

No comments: