Thursday, July 24, 2008

வேண்டும்

குற்றமில்லாத பூமி வேண்டும்
சத்தமில்லாத சாலை வேண்டும்
நேர்மையான அரசியல் வேண்டும்
தூய்மையான காற்று வேண்டும்
வழுவாத ஒழுக்கம் வேண்டும்
நழுவாத வீரம் வேண்டும்
உண்மையான நண்பன் வேண்டும்
உலகத்துள் அமைதி வேண்டும்
வலுவான தேகம் வேண்டும்
வளமான வயல்கள் வேண்டும்
அச்சமில்லாத சுதந்திரம் வேண்டும்
அயர்வில்லாத உழைப்பு வேண்டும்
உள்ளத்தில் உண்மை வேண்டும்
உறவாட அன்னை வேண்டும்
குறையாத மகிழ்ச்சி வேண்டும்
குன்றாத நன்மைகள் வேண்டும்
இறவாத பக்தி வேண்டும்
இரக்கமுள்ள நெஞ்சம் வேண்டும்
அழியாத பெருமை வேண்டும்
அனைவருக்கும் இன்பம் வேண்டும்
எனக்கு இன்னொன்றும் வேண்டும் - அது
இக்கவிதை அச்சாக வேண்டும்

This is also written long back, during my school days for my school magazine. As i was dusting my book shelf i chanced upon the old magazines and it took me to the precious past... certainly one's school life is the best part of his life.

1 comment:

Anand said...

Nigal yendrum yelutha vendum