Tuesday, May 27, 2008

உன்னை பிடிக்கிறது

மூன்றாம் பிறைக்கு
முதல் நாள் வரும் வெள்ளி நிலவு
முழுக்க மூடாத
மேகத்தின் வழி கசியும் கதிரொளி
மகன் உறங்க
அறுப்புக்கு நடுவே தாய் பாடும் தாலாட்டு
மூழ்க விடாத
சித்திரை மாத சிற்றாற்று குளியல்
மறுபடி மறுபடி
ரசித்தாலும் சலிக்காத மழலை சிரிப்பு
மணிகணக்கில்லாமல் கொட்டும்
ஜன்னலோர கார்த்திகை மழை
உனக்கு பிடித்தவை எல்லாம்...
எனக்கு பிடிக்கிறது
உன்னை பிடித்ததனால்...

No comments: